How to attract money - பண வசியம்
உங்களுடைய வீட்டில் பணவரவை தடுக்கக் கூடிய எந்த ஒரு தோஷமாக இருந்தாலும் அது, இந்த பரிகாரத்தின் மூலம் நிவர்த்தியாகும் என்று சொல்லப்பட்டுள்ளது.
இந்த பரிகாரத்தை நிறைய பேர் செய்து பலன் அடைந்து உள்ளார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது. மகாலட்சுமிக்கு பிடித்தமான, சில பொருட்களை வைத்து தான் இந்த பரிகாரத்தை செய்ய போகின்றோம்
பரிகாரத்தை பார்த்துவிடுவோமா? முதலில் ஒரு அகலமான பாத்திரத்தை எடுத்துக் கொள்ளுங்கள்.
இரும்பு உலோகத்தால் செய்யப்பட்ட பாத்திரத்தை மட்டும் தவிர்த்து விட வேண்டும். கரும்புள்ளிகள் இல்லாத 1 எலுமிச்சை, 3 மஞ்சள் கிழங்கு, 1 மூங்கில் குச்சி, 1 ரூபாய் நாணயங்கள், அல்லது ரூபாய் நோட்டுக்கள், தங்க நாணயம், தங்க நகைகள், வெள்ளி நாணயம், வெள்ளி நகைகள், உங்களிடத்தில் எது இருந்தாலும் இந்த பரிகாரத்திற்கு அதனை பயன்படுத்திக் கொள்ளலாம். இவை எல்லாவற்றையும் விட முக்கியமான ஒரு பொருள் ‘மல்லிகைப்பூ'.
முதலில் நீங்கள் எடுத்து வைத்திருக்கும் அகலமான பாத்திரத்தில், ரூபாய் நாணயங்கள், ரூபாய் நோட்டுகள், தங்க நகை இதில் ஏதாவது ஒன்றை போட வேண்டும். (இல்லை என்றால், இது எல்லாவற்றிலிருந்தும் ஒவ்வொன்றையும் கூட வைக்கலாம்.) அதன் மேலே ஒரு எலுமிச்சை பழம், 3 மஞ்சள் கிழங்கு, மூங்கில் குச்சியை வைத்து விட வேண்டும்.
இறுதியாக உதிரியான மல்லிகைப்பூவை அதன் மேல் போட்டு, உள்ளே வைத்திருக்கும் பொருட்களை எல்லாம் மூடி விடுங்கள். அவ்வளவுதான், பரிகாரமே! (அதாவது, அகலமான பாத்திரத்தில் உள்ளிருக்கும் பொருட்களின் மேல், கோபுரமாக மல்லிகைப் பூக்களைக் கொட்டி விட வேண்டும்.)
தயார் செய்து வைத்திருக்கும் இந்த கிண்ணத்தை, உங்கள் வீட்டு பீரோவிலோ அல்லது கஜானா பெட்டியிலோ வைத்துவிடுங்கள். ஒருநாள் மட்டும் தான் வைக்க வேண்டும். அதுவும் வெள்ளிக்கிழமையில் வைத்தால் மிகவும் சிறப்பு.
வாரம்தோறும் வெள்ளிக்கிழமைகளில் இப்படி செய்யலாம். இந்த கிண்ணத்தை உங்கள் வீட்டு பீரோவில், ஒரேநாள் வைத்துவிட்டு, வாடிய பூக்களை எல்லாம் நீக்கிவிட்டு, அதன் உள்ளே வைத்திருக்கும் பொருட்களை, உங்களுடைய உபயோகத்திற்கு பயன்படுத்திக் கொள்ளலாம். எலுமிச்சை பழத்தை மட்டும் கால் படாத இடத்தில் தூக்கி வீசி விடுங்கள்.
இதற்கான அர்த்தம் என்னவென்றால், உங்களுடைய வீட்டில் இருக்கக்கூடிய பணம் நகை சேருவதில், பிரச்சினைகள் இருந்தாலும் கூட அந்த தோஷத்தை நிவர்த்தி செய்யக் கூடிய தன்மை இந்த மல்லிகைப் பூவிற்கு உண்டு. பொதுவாகவே, இந்த பூவின் வாசத்திற்கு மயங்காதவர்கள் யாருமே இல்லை. அந்த மகாலட்சுமியையும் வசியப்படுத்த கூடிய சக்தி இந்த மல்லிகைப் பூவிற்கு அதிகமாகவே உள்ளது.
மல்லிகைப்பைவோடு நாம் சேர்த்து வைத்திருக்கும் சில மங்களகரமான பொருட்களுக்கும், நம் மனதில் நினைத்துக் கொண்டிருக்கும் நல்ல ஆற்றலை வெளிக்கொண்டு வந்து, ராஜபோக வாழ்க்கையை தரக்கூடிய சக்தி இருக்கிறது. ஆகவே, இந்த பரிகாரத்தை ஒருமுறை உங்கள் வீட்டில் செய்து பாருங்கள்.
அந்த காலங்களில், இந்த பரிகாரத்தை பெரிய பெரிய யாகங்கள் செய்து, அதன் பின்பு அந்த மல்லிகை பூவை எடுத்து, பணப் பெட்டியில் வைப்பார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
அந்த அளவிற்கு பணவசதி நம்மிடம் இல்லை. ஆகவே, இந்த சுலபமான பரிகாரத்தை செய்து பலன் அடைவோம். பரிகாரம், நல்ல பலன் அளித்தால், வாரம் தோறும் வெள்ளிக்கிழமைகளில் இந்த பரிகாரத்தை செய்யலாம் என்ற ஒரு கருத்தை முன்வைத்து இந்த பதிவினை நிறைவு செய்து கொள்ளலாம்.
0 கருத்துகள்