vasiyam in 24 hours (வசியம் செய்வது எப்படி ) - manthrigam

 




vasiyam in 24 hours  (வசியம் செய்வது எப்படி ) -  manthrigam


அனைவருக்கும் மகா குருவின்  வணக்கம்




ஒரே நாளில் வசியம்.இந்த தலைப்பை பார்த்து விட்டு நிறைய பேருக்கு நிறைய விஷயங்கள் தோன்றும்.


அடியேன் 2018 சுமாருக்கு யூடியூபில் ஒரு பதிவில் ஒரு சில நொடிகள் மட்டுமே காணும்படி வெளியிட்டுருந்தேன்.




24 மணி நேரத்தில் வசியம்


VIP customers only




என்பது போல போட்டிருந்தேன்.இதற்கு வாய்ப்பே இல்லை என்று பலரும் பண்ணலாம் என்று சிலரும் அவரவர் கருத்தை பதிவிட்டு கொண்டிருந்தனர்.


அந்த சமயத்தில் நிறைய நபர்கள் அவர்களுக்கு இந்த வசியத்தை செய்து தரும்படி தொந்தரவு செய்ய ஆரம்பித்து விட்டனர்


அடியேன் வேறு வழி இல்லாமல் அந்த பதிவையே யூடியூப்பில் இருந்து நீக்கி விட்டேன்.


சரி விஷயத்திற்கு வருவோம்.உண்மையிலேயே 24 மணி நேரத்தில் வசியம் சாத்தியமா???


நிச்சயமாக சாத்தியம்.சென்ற வருடம் கடைசியாக இந்த முறையை ஒருவருக்கு கையாண்டோம்.கணவன் மனைவி இருவரும் பிரிந்து உள்ளார்கள்.


கணவர் என்னிடம் வந்தார். ஐயா பல இடங்களுக்கு சென்று பார்த்தும் எனக்கு தீர்வு கிடைக்கவில்லை. நீங்கள் செய்து தாருங்கள் என்றார்.


அடியேனும் சரி வசிய பூஜை செய்து தருகிறேன் தங்களுக்கு 48 நாட்களுக்கு முன்பே அவரிடம் இருந்து தகவல் வரும் என்றேன்.ஆனால் அவர் சம்மதிக்கவில்லை. இல்லை ஐயா எனக்கு 24 மணி நேரத்தில் வசியம் செய்து தாருங்கள் எவ்வளவு செலவானாலும் பரவாயில்லை என்றார்.


என்ன சொல்வது என்று தெரியவில்லை சரி உங்களுடைய விவரங்கள் வேண்டும் கொடுங்கள் என்றேன்.


ஐயா எனக்கு விவசாய வேலை இதை விட்டு விட்டு வரமுடியாது. நான் வேண்டும் என்றால் வாட்ஸ் ஆப் மூலமாக அனுப்பறேன் என்றார்.சரி அனுப்புங்கள் என்று சொல்லி விட்டு வெளியில் ஒரு அவசர வேலையாக சென்று விட்டேன்.


இரவு வாட்ஸ்ஆப் எடுத்து பார்த்தால் கட்டாயமாக செய்து தாருங்கள் என்பதில் ஆரம்பித்து please please please please வரை பல மெசேஜ்.


எல்லாம் சரிதான் ஆனால் இவர்களுக்கு ஒரே நாளில் வசியம் சாத்தியமா என்பதை முதலில் பிரசன்னம் பார்ப்போம் என்று முதலில் சோழி பிரசன்னம் பார்த்தேன்.முடியும் என்று வந்தது 


அடுத்து அவர் எனக்கு போன் செய்த நேரத்தையும் மெசேஜ் அனுப்பிய நேரத்தையும் வைத்து பார்த்தேன் குரு பலம் இருக்கிறதா அப்போதைய கிரக சூழ்நிலை என்ன என்பதை எல்லாம் கவனித்து விட்டு இறுதியாக அவருக்கு போன் செய்தேன்.


ஐயா தங்களுக்கு சாதகமாகவே அனைத்தும் முடியும். செய்து தருகிறேன்.என்றேன் அவருக்கு மிகவும் மகிழ்ச்சி.


ஆனால் இதை எல்லாம் சரியாக செய்ய வேண்டும். எனவே ஒவ்வொரு விஷயத்தையும் மிக கவனத்தோடு செய்ய ஆரம்பித்தேன்.இதற்கு பூஜை செய்ய ஆகும் காலம் குறைந்தது 7நாள்.


அதன்பிறகு அவரை வரசொன்னோம்.இல்லை ஐயா நீங்கள் கூரியர் மூலம் அனுப்புங்கள் என்னால் வர இயலாது என்றார்.சரி என்று அனுப்பி வைத்தோம்.பூஜைக்கு ஆகும் பணம் கூட அவர் நேரில் வந்து தரவில்லை. வங்கி கணக்கில் செலுத்தினார். அவ்வளவு பிஸி...


கூரியர் அனுப்பிய அன்று இரவே பல மெசேஜ் அனுப்பினார். நல்லபடியா நடக்குமா நான் பல இடத்தில் பார்த்துட்டேன் ஒண்ணும் நடக்கல இந்த மாதிரி பல மெசேஜ் அனுப்பிட்டே இருந்தார் .


ஐயா நாளை ஒரு நாள் பொறுங்கள் கட்டாயமாக தீர்வு வரும் கவலைபடாதீர்கள்


என்று அவரை சமாதானபடுத்தினேன்.


அடுத்த நாள் காலையில் போன் செய்தார்.ஐயா கூரியர் வந்து விட்டது. என்ன செய்ய வேண்டும் என்றார்.செய்ய வேண்டிய வழிமுறைகளை சொன்னேன்.சரி ஐயா செய்கிறேன்என்றார்.


அதன்பிறகு அடியேனும் சற்று வேலையாக வெளியே சென்று விட்டேன்.எதிர்பாராத வகையில் போன் சுவிட்ச் ஆப் ஆகிவிட்டது. அப்போது மூலிகை எடுப்பதற்கு காட்டிற்கு சென்ற சமயம். சரி வேறு வழியில்லை என்று வேலையை பார்த்து கொண்டிருந்தேன்.


அன்று இரவு வீடு திரும்பவே வெகு நேரம் ஆகிவிட்டது. வந்து போனை சார்ஜ் செய்து விட்டு ஆன் செய்தேன். உடனே போன் வந்தது.11 மணிக்கு யார் கூப்பிடறாங்க என்று பார்த்தால் ஒருநாள் வசியம் செய்தவர் ஐயா ரொம்ப தேங்க்ஸ்  என்றார்


சொல்லுங்கள் என்றேன்.ஐயா நீங்கள் சொன்னபடி செய்தேன்.நான் செய்தபோது மணி 11 அடுத்த நாள் 11மணிக்குள் நடக்கும் அப்படின்னு பார்த்தேன்.ஆனால் இரவு 8 மணிக்கே என் மனைவி போன் செய்தார்.வீடியோ கால் செய்யட்டுமா என்று கேட்டேன்.அவரே வீடியோகால் செய்து பேசினார்.என் முகத்தை பார்த்து விட்டு அழுதார்.நாளைக்கு என்ன வந்து கூட்டிட்டு போங்க அப்படினு அழுதார் என்று நடந்த அனைத்து விஷயங்களையும் ஒன்று விடாமல் சொன்னார்.


மகிழ்ச்சி ஐயா நாளை மனைவியை அழைத்து கொண்டு வாருங்கள் பிறகு கால் செய்யுங்கள் என்று வைத்துவிட்டேன்.


அடுத்த நாள் மதியம் போல போன் செய்தார் ஐயா எத்தனையோ மந்திரவாதிகள், குறி சொல்றவங்க அப்படினு போய் பார்த்தும் எனக்கு நடக்கல நீங்க மட்டும் தான் ஒரே ஒரு நாளில் சவால் விட்டு சாதித்து காட்டியுள்ளீர்கள்.என்று உணர்ச்சி பொங்க பேசினார்.


ஐயா நம் கையில் எதுவும் இல்லை எல்லாம் தெய்வ செயல் என்றேன்.அதன்பிறகு அவர் இன்று வரை அடிக்கடி கூப்பிட்டு நலம் விசாரிப்பார்.


இந்த வசிய முறை அடியேனுடைய  முன்னோர்கள் அடியேனுக்கு அளித்த பொக்கிஷம். இந்த முறையை கற்று தரும்படி பலரும் கேட்டு கொண்டு உள்ளனர்.


ஆனால் இதை தவறான செயலுக்கு பயன்படுத்த வாய்ப்பு உள்ளதால் யாருக்கும் இதுவரை கற்றுத்தரவில்லை.


இது போல பல சம்பவங்கள் 


பல சூட்சும முறைகளை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்.


நன்றி வணக்கம்



for more details


MAHA GURU BALAJI

CELL : +91 8838511337

கருத்துரையிடுக

0 கருத்துகள்