soli prasannam | சோழி போட்டு குறி சொல்லும் பயிற்சி | சோழி பிரசன்ன அட்டவணை | manthrigam



soli prasannam

அனைவருக்கும் வணக்கம் இன்னைக்கு நம்முடைய மகா சக்தி சித்தர் பீடம்  பதிவில் மாந்திரீக ரகசியங்களை பாத்துட்டு வந்துட்டு இருக்கோம். அந்த வரிசையில் இன்னைக்கு சோழி பிரசன்னம் எப்படி பார்க்கிறது அப்படிங்கறது பார்த்திடலாம். 




12 சோழிகள் எடுத்து சுத்தம் செய்து பன்னீரில் ஊற வைக்க வேண்டும் ஒரு மணி நேரம் ஊற வைத்து மறுபடியும் அந்த சோழிகளை சுத்தமான தண்ணீர் விட்டு அலசி பிறகு சுத்தமான துணி கொண்டு துடைத்து  விட்டு விபூதியால் மீண்டும் துடைக்க வேண்டும். 

உங்களுடைய இஷ்ட தெய்வம் உங்களுடைய குலதெய்வம் இவர்களுக்கு ஒரு சிறிய படையல் போட்டுவிட்டு இந்த சோழி பிரசன்னம் எனக்கு சித்தி ஆக வேண்டும் என்று மனதார பிரார்த்தனை செய்து சோழி  பிரசன்னத்தை ஆரம்பிக்க வேண்டும். 

12 சோழிகளை கையில் எடுத்துக் கொண்டு உங்களுடைய இஷ்ட தெய்வம் குலதெய்வத்தை நினைத்து சோழிகளை உருட்டவும். 




ஒரு சோழி நிமிர்ந்து இருந்தால் :


வாடிக்கையாளர் நினைத்து வந்த காரியம் 100% நடக்கும் அவர் எண்ணிய எண்ணம் கைகூடும் இதுவரை பிடித்திருந்த நோய் நீங்கும் சிகிச்சை எடுப்பதாக அவர் முடிவெடுத்திருந்தால் ஏதாவது நோய் இருந்து அதற்காக அவர் சிகிச்சை எடுப்பதற்காக முடிவு செய்திருந்தால் 100% சிகிச்சை எடுக்கலாம் சிகிச்சை கட்டாயமாக பலன் தரும் பெண்களால் பல வகையில் உதவி கிட்டும் பிரிந்து இருக்கக்கூடிய சொந்த பந்தங்கள் தானே வந்து சேர்வார்கள் சுபம் உண்டாகும். 



இரண்டு சோழி நிமிர்ந்து இருந்தால் : 


எடுத்த காரியம், தாமதமாக கைகூடும் தடை உண்டாகும் கணவன் மனைவிக்குள் ஏற்பட்ட கருத்து வேறுபாடுகள் சரியாக நாளாகும் மனக்குழப்பமும் சஞ்சலமும் அதிகரிக்க கூடிய காலகட்டம் புதிய முடிவுகள் எடுப்பதில் கவனம் தேவை உடல்நலத்தில் அக்கறை தேவை சளி தொந்தரவு உடம்பில் வாதம் அதிகரித்தல் போன்ற விஷயங்கள் ஏற்பட வாய்ப்புள்ளது அருகில் உள்ள அம்மன் கோவிலுக்கு சென்று பால் அபிஷேகம் அல்லது அன்னதானம் செய்ய நன்மை ஏற்படும்


மூன்று சோழி நிமிர்ந்து இருந்தால் : 


எண்ணியது கை கூடாது கட்டாயமாக தடை என்பது ஏற்படும் வீண் வம்பு வழக்குகள் ஏற்படும் சாதகமான காலகட்டம் இல்லை என்பதை கூறவும் எந்த காரணத்தைக் கொண்டும் யாருக்கும் ஜாமீன் இருப்பது கூடாது யாரிடத்திலும் வாக்குறுதி கொடுக்காமல் இருப்பது நல்லது  கஷ்ட நஷ்டங்களை சந்திக்காமல் இருக்க முடிந்த வரைக்கும் யாருடைய விஷயத்திலும் தலையிடாமல் இருக்கவும் மற்றவர்களுடைய பேச்சுக்கு செவி கொடுப்பது நல்லது
விடுபட்ட தெய்வ வேண்டுதல்கள் கோரிக்கைகள் ஏதாவது இருந்தால் கட்டாயமாக நிறைவேற்ற வேண்டிய காலகட்டம் நண்பர்களிடமும் உறவினர்களிடமும் சற்று ஒதுங்கி இருப்பது நல்லது




நான்கு சோழி நிமிர்ந்து இருந்தால்:


எண்ணிய காரியம் உடனடியாக கைகூடும்  வயதில் பெரிய நபர்களின் உதவி என்பது தானாக தேடி வரும் தன தானியம் அதிகரிக்கும் பணப்புழக்கம் அதிகரிக்கும் மகாலட்சுமியுடைய கடாட்சம்  வீட்டில் நிலைத்து நிற்கும் இதுவரைக்கும் சந்தித்து வந்த கஷ்ட நஷ்டங்கள் தொல்லைகள் நோய் நொடிகள் வீண் விரயங்களில் இருந்து விடுபடக்கூடிய காலகட்டமாக அமைந்திருக்கிறது இதற்கு மேல் தொட்டது தொடங்கும் சுபம் உண்டாகும்




ஐந்து சோழி நிமிர்ந்து இருந்தால் :

நாடிய பொருள் தானாக தேடி வரும் நீங்கள் செல்லக்கூடிய பயணம் எதுவாக இருந்தாலும் போகும் காரியம் 100% நன்மையில் முடியும் தொட்டால் துவங்கும் எடுத்த காரியம் வெற்றி பெறக்கூடிய காலகட்டம் எந்த முடிவுகள் எடுப்பதாக இருந்தாலும் தைரியமாக தாராளமாக செய்யலாம் சுபம் உண்டாகும்




ஆறு சோழி நிமிர்ந்து இருந்தால் :

எண்ணிய காரியம் கைகூடாது நிச்சயமாக தடை என்பது ஏற்படுத்தும் எதிரிகளாலும் பலவித மாந்திரீக பாதிப்புகளாலும் தீய சக்திகளாலும் தொந்தரவு அப்படிங்கறது கண்டிப்பா ஏற்படும் எந்த முடிவுகள் எடுப்பதாக இருந்தாலும் ஒருமுறைக்கு இருமுறை யோசித்து பிறகு முடிவெடுப்பது நல்லது தேவையில்லாமல் கடன் பிரச்சனைக்கு ஆளாக கூடிய காலகட்டமாக உள்ளதால் நோய் நொடிகள் ஏற்பட்டு மருத்துவ செலவுகள் ஏற்படக்கூடிய காலகட்டமாக உள்ளதால் எந்த முடிவுகளிலும் நிதானம் என்பது மிகவும் அவசியம் இதிலிருந்து விடுபட அருகில் உள்ள ஆஞ்சநேயர் கோவிலில் விளக்கேற்றி வழிபட இந்த பிரச்சனைகளில் இருந்து விமோசனம் என்பது கிடைக்கும்




ஏழு சோழி நிமிர்ந்து இருந்தால் : 

எண்ணியது எண்ணிய படியே கைகூடும் தெய்வ அனுகிரகம் உண்டு கணவன் மனைவி ஒற்றுமை அதிகரிக்கும் இதுவரை ஏற்பட்டு வந்த குடும்ப சண்டைகள் சச்சரவுகள் நிவர்த்தியாகும் புதிய நண்பர்கள் அறிமுகங்கள் கிடைக்கும் தொழில் வியாபாரம் செய்பவர்களுக்கு வாடிக்கையாளர்கள் நன்மதிப்பை பெறக்கூடிய காலகட்டம் கணவன் மனைவிக்குள் ஏற்பட்டு வந்த மனக்கசப்பு அகலும் புதிய முயற்சிகள் எடுக்க நினைப்பவர்கள் தாராளமாக முயற்சி செய்யலாம் எதிர்பாராத உதவிகள் கிடைக்கக்கூடிய காலகட்டம் அருகில் உள்ள பெருமாள் கோவிலுக்கு சென்று வழிபட்டு வர மென்மேலும் வெற்றி கிடைக்கும் சுகம் உண்டாகும்





எட்டு சோழிகள் நிமிர்ந்து இருந்தால் : 


எண்ணிய யாவும் எட்டாக்கனியாக போய்விடும் யாருக்கும் எந்த உதவியும் செய்ய வேண்டாம் அது முடிவில் உங்களுக்கு அவப்பெயரையே ஏற்படுத்தும் யாருக்கும் ஜாமீன் கையெழுத்து போட வேண்டாம் தொழில்  வியாபாரத்தில் பார்ட்னர்ஷிப் சம்பந்தமான பிரச்சினைகள் ஏற்படக்கூடிய வாய்ப்பு உள்ளதால் கவனம் தேவை வண்டி வாகனத்தில் செல்லும் பொழுது நிதானம் தேவை  எதிர்பாராத விபத்துக்கள் கண்டங்கள் ஏற்பட வாய்ப்பு உள்ளது மருத்துவ சிகிச்சை எடுக்கக்கூடிய நிலை ஏற்படும் எனவே உடல் நலத்தில் கவனம் தேவை இதற்கு அருகில் உள்ள சிவபெருமான் கோவிலுக்கு சென்று அங்குள்ள நவகிரகங்கள் சன்னதியில் சனி பகவானுக்கு மணமுருகி வழிபட்டு விளக்கேற்றி அங்குள்ள பக்தர்களுக்கு அன்னதானம் செய்ய தொல்லையானது நீங்கும் சனி பகவான் அருளால் நன்மை ஏற்படும்



ஒன்பது சோழிகள் நிமிர்ந்து இருந்தால் : 

சகலமும்  கை கூடும் தந்தை வழி உறவுகளாலும் தந்தையாலும் நன்மை உண்டு கோவில் குளங்களுக்கு செல்லக்கூடிய பாக்கியம் அமையும் குரு பகவான் அருள் உண்டு  குரு ஆசியால் எண்ணியது எண்ணியபடியே நடக்கும் புதிய வித்தை பயில  புதிய கல்வி படிப்பு படிக்க அருமையான காலகட்டம் உங்களுடைய குழந்தைகளுக்கும் உங்களுக்குமான உறவு சிறப்பு அடையும் நன்மை நடக்கும் சுகம் உண்டாகும்




பத்து சோழிகள் நிமிர்ந்து இருந்தால் : 

தொழிலில் கவனம் தேவை எதிர்பாராத நஷ்டங்கள் எதிர்பாராத அலைச்சல் ஏற்பட வாய்ப்பு உள்ளது செய்த வேலையை திரும்பத் திரும்பச் செய்யக்கூடிய கஷ்டம் ஏற்படும் வேலையில் திருப்தி இருக்காது உங்களுக்கு உண்டான அதிகாரம் குறைய வாய்ப்பு உள்ளது உங்களுடைய பேச்சுக்கு மரியாதை குறைவு அப்படிங்கறது கண்டிப்பா ஏற்படும் கவனமாக இருக்க வேண்டிய காலகட்டம் வீண் விரயங்களை சந்திக்கக்கூடிய வாய்ப்பு உள்ளது 






பதினொரு  சோழி நிமிர்ந்து இருந்தால் : 


பணம் பல வழிகளில் தேடி வரக்கூடிய காலகட்டம் மூத்த சகோதர வழியில் நன்மை ஏற்படும் இதுவரையிலும் தொழிலில் ஏற்பட்ட நஷ்டம் என்ற நிலை மாறி லாபகரமாக நடக்கக்கூடிய காலகட்டம் வியாபாரம் செய்பவர்களுக்கு லாபம் அதிகரிக்கும் உத்தியோகம் பார்ப்பவர்களுக்கு பணியிடத்தில் நற்பெயர் ஏற்படும் பல நாட்களாக சம்பள உயர்விற்கு எதிர்பார்த்துக் கொண்டிருந்த காலகட்டம் இப்பொழுது கைகூடிவரும் மனதில் நீண்ட நாட்களாக நினைத்து வந்த விஷயத்தை நிறைவேற்றக்கூடிய காலம் தானாக அமைகிறது நன்மை நடக்கும் சுபம் உண்டாகும்





பன்னிரெண்டு  சோழி நிமிர்ந்து இருந்தால் : 

வீண் விரயம் தூக்கமின்மை பிரச்சனையால் அவதிப்படுதல் கடன் பிரச்சனையில் கேட்ட இடத்தில் கடன் கிடைக்காமல் அலைக்கழித்தல் அலைச்சல் ஏற்படுதல் நேரத்திற்கு உணவு அருந்த முடியாமல் அலைச்சல் ஏற்படும் மன சஞ்சலம் மன கஷ்டம் ஏற்படக்கூடிய காலகட்டம் தேவையில்லாத எதிர்பாராத செலவுகள் ஏற்படக்கூடிய காலகட்டம் கையில் இருக்கக்கூடிய பணத்திற்கு மேலாக செலவுகள் வரக்கூடிய காலகட்டமாக இருப்பதால் சற்று எச்சரிக்கையாக இருக்க வேண்டும் உங்களுடைய குலதெய்வத்தை வழிபட்டு வர இந்த பிரச்சனைகளிலிருந்து விடுபடலாம் நன்மை நடக்கும் சுபம் உண்டாகும்



for more details 

MAHA GURU BALAJI
CELL : +91 8838511337

கருத்துரையிடுக

0 கருத்துகள்