எடுத்த காரியம் வெற்றியாக விபூதி மந்திரம்:
Vasiyam | மாந்திரீகம் | வசிய விபூதி | மகா குரு பாலாஜி
நெய் விளக்கு ஏற்றி விநாயகர் பிடித்து வைத்து அருகம்புல் சாற்றி அலங்கரித்து, விளக்கிற்கு முல்லை மலர் சாற்றி, தேங்காய், பழம், சர்க்கரைப் பொங்கல். கற்கண்டு, விபூதி, சாம்பிரணி, ஊதுவத்தி இவைகளுடன் ஒரு தட்டில் விபூதியை பரப்பி வைக்க வேண்டும் முதலில் முறைப்படி விநாயகர் பூஜை முடித்து விட்டு கிழக்கு முகமாக அமர்ந்து வெற்றிலை காம்பு அல்லது மலரின் காம்பினால் விபூதியை தட்டில் பரப்பி விபூதியில் பெரிதாக ஓம் என எழுத வேண்டும். அதனுள்ளே "சிவாயநம" என எழுத வேண்டும்.
பின்பு
"ஓம் சிவாய நம ஓம் ஓம் சர்வ சக்தி ஓம் ஓம் ஓங்கார சக்தி ஓம் ஓம் பிரணவப் பொருளே ஓம் ஓம் பஞ்சாட்சரமே ஓம் ஓம் பிரபஞ்ச சக்தியே ஓம் ஓம் சர்வகாரிய சித்தி சக்தியே ஓம் ஓம் சர்வ ஜெயசக்தியே ஓம் ஓம் மசி நசி அங் மங் சங் ஆதார சக்தியே ஓம்"
இந்த மந்திரத்தை 11 நாள் தினம் 108 விதம் செய்து வர சித்தியாகும்.
சித்தியான பிறகு ஒரு முறை கூறி விபூதி பரப்பி தகட்டில் கற்பூரம் ஏற்றி வணங்கினால் போதும் இந்த விபூதியை எல்லா வகைக் காரியங்களும் நலம் பெற நெற்றியில் பூசினால் போதும், வசியம், வசீகரம், காரியசித்தி இவைகள் ஏற்படும்.


0 கருத்துகள்