உடல் கட்டு மந்திரம்:
விபூதியை கையில் வைத்துக்கொண்டு வடக்கு முகமாய் இருந்து கொண்டு
"ஓம் உள்ளங்கால் இரண்டும் பூமாதேவி காவல்
கணுக்கால் இரண்டும் கணபதி காவல்
முழங்கால் இரண்டும் முக்கோணர் காவல் துடை இரண்டும் துர்க்கை காவல் அரை ஆதி சிவன் காவல்
...
வயிறு வைரவன் காவல்
மார்பு மார்க்கண்டேயன் காவல் கழுத்து கந்தர்வன் காவல்
உதடு உத்தமாதேவி காவல் பல்லு பரசுராமன் காவல் நாவு நாராயணன் காவல்
கண்ணுரெண்டுக்கும் காளிங்கராயன் காவல்
நெத்திக்கு நீலவர்ணன் காவல் தலைக்கு தம்பிரான் காவல்
உடம்பு சுற்றிலும் சங்கு சக்கரம் காவல் என்னை கார்க்காவிட்டால் இது என் கட்டல்ல ஈஸ்வரன் கட்டு என்னை காக்க நமசிவாய "
இந்த மந்திரத்தை 21 முறை சொல்லிவிட்டு பிறகு பூஜையில் அமரவும்.
விபூதியை தன்னைச்சுற்றிலும் போட்டு கொண்டால் எந்த தீய சக்தியும் நம்மை ஒன்றும் செய்ய முடியாது.
எந்தவொரு மந்திரம் செபிக்கும் முன்னரும் இக்கட்டு மந்திரத்தை செபித்து விபூதியை நம்மை சுற்றிப்போட்டுக்கொண்டால் அம்மந்திரத்தை சித்தி செய்ய விடாமல் செய்யும் துஷ்டசக்திகளும்,கெட்டவர்களின் சதியும், மற்ற எந்த இடையூறும் நீ அந்த விபூதியை விட்டு வெளியே வரும் வரை உன்னை நெருங்காது.அதற்குள் நீ சித்தி செய்ய வேண்டிய மந்திரத்தை சித்தி செய்து கொள்ளலாம். நீ அவ்விபூதியை விட்டு வெளியேரி விட்டால் அவ்விபூதியின் அற்றல் முறிந்து விடும்.


0 கருத்துகள்