Sevvai dosham pariharam - Tamil jathagam - jathagam online tamil - manthrigam

செவ்வாய் தோஷ பயமே வேண்டாம் :





எந்தவொரு செயலுக்கும் மாற்று ஏற்பாடு வைத்துத் தந்திருக்கிறது சாஸ்திரம். ஆங்கிலத்தில் ‘ஆப்ஷன்’ என்பார்களே! அப்படி சாஸ்திரத்திலும் இருக்கிறது. ஜோதிட சாஸ்திரத்திலும் உண்டு.


சரி   செவ்வாய் பகவான் என்பவர் யார்?


பரத்வாஜர் ரிஷிக்கும் தேவகன்னிகைக்கும் நர்மதை ஆற்றங்கரையில் பிறந்தவர் என்றும் ரிஷியாலும், தேவகன்னிகையாலும் கை விடப்பட்டு பூமா தேவியால் வளர்க்க பட்டவர் என்றும் கூறப்படுகிறது.


ஆனால் மற்றுமொரு கதையும் உள்ளது,


மாந்திரீக புத்தகம் பதிவிறக்கம் செய்ய கிளிக் செய்யவும்...,



அசுரர்களின் அட்டகாசத்தை ஒடுக்குவதற்காக, சூரியபகவானுக்கு வருகிறது கட்டளை. அசுரக் கூட்டத்தை அழித்து அவர்களின் ராஜகுரு சுக்ராச்சரியரையும் அழிக்க வேண்டும் என்பதே உத்தரவு.


ஆனால் சூரிய பகவானோ... உயிர்களை உருவாக்கும் நெருப்புத் தன்மை உடையவர். உலக இயக்கத்துக்கேக் காரணமானவர். அப்படிபட்டவர் எப்படி ஒரு உயிரை அழிப்பார்? அழிக்க எப்படி மனம் வரும்?


அதனால் தன் தலை முடியிலிருந்து ஒன்றை எடுத்து அதற்கு உருவத்தையும் உயிரையும் கொடுத்தார் சூரிய பகவான். ( சிலர், சூரியனின் சேவகர் அகோரர் என்றும் சொல்கிறார்கள்)


மாந்திரீக புத்தகம் பதிவிறக்கம் செய்ய கிளிக் செய்யவும்...,



அவரே குஜன், பௌமன், அங்காரகன் என்று அழைக்கப்படும் மங்கலகாரகன் செவ்வாய் பகவான்).


இவர் தீமைகளை அழிப்பதற்காகப் படைக்கப்பட்டவர், எனவே இவர் அழிக்கும் நெருப்பு. அதாவது,


சூரியன்— ஆக்கும் நெருப்பு


செவ்வாய்— அழிக்கும் நெருப்பு


கேது — தெய்வீக நெருப்பு ( தீபம், கற்பூரம், யாகம், ஹோமம் முதலானவற்றைச் சொல்லலாம்)


மாந்திரீக புத்தகம் பதிவிறக்கம் செய்ய கிளிக் செய்யவும்...,



தீய சக்தி எனும் குப்பைகள் எரிக்கபட்டால்தான் நாம் நலமாக இருக்க முடியும், எனவே செவ்வாயைப் பார்த்துப் பயப்படத் தேவையில்லை, அவர் மங்கலகாரகன், சுபத்தை மட்டுமே செய்வார்.


இவர் அசுரர்களை அழித்தாரா? சுக்ராச்சார்யரை வதம் செய்தாரா? நவக்கிரகத்தில் எப்படி இடம் பெற்றார்? இதையெல்லாம் தொடர்ந்து பார்ப்போம்.


இப்படி அசுரர்களை அழிக்க சூரியனால் படைக்கப்பட்ட செவ்வாய், அசுரர்களை வதம் செய்த இடம் மகர ராசி. அந்த மகர ராசியில்தான் செவ்வாய் உச்சம் எனும் உயரிய அந்தஸ்தை அடைகிறார்,


அதாவது ஆட்சி வீட்டில் ( மேஷம், விருச்சிகம் ) 100 சதவிகித பலம், உச்ச வீடான மகரத்தில் 200 சதவிகித பலம் என அடைகிறார்,


மாந்திரீக புத்தகம் பதிவிறக்கம் செய்ய கிளிக் செய்யவும்...,


அசுரர்களை அழித்த செவ்வாய், அசுர குருவான சுக்கிராச்சார்யர் என்ற சுக்கிரனை அழிக்க முற்படும் போது சுக்கிரன், செவ்வாயோடு ஒரு ஒப்பந்தம் செய்து கொள்கிறார்.


அதாவது மனிதர்களின் பாவபுண்ணியங்களுக்கு ஏற்ப பலன்களைத் தர நவகிரகங்கள் உருவாக்க பட இருக்கிறார்கள். அதில் உம்மையும்

( செவ்வாயை) ஒரு கிரகமாக நான் அங்கீகரிக்கிறேன். எனவே என்னை ஒன்றும் செய்துவிடாதே என கேட்டுக்கொள்கிறார் சுக்கிர பகவான்.


அதை ஏற்று செவ்வாய் பகவான், சுக்கிரனை வதம் செய்யாமல் விட்டு விடுகிறார்.


 இதனால் செவ்வாய், சுக்கிரன் வெளிப்பார்வைக்கு ஒருவருக்கொருவர் பகை போல் தெரிந்தாலும் இருவருக்கும் ரகசிய நட்பு உள்ளது.


இதை நம் ஜாதகத்தில் எப்படி உணர முடியும்?


மாந்திரீக புத்தகம் பதிவிறக்கம் செய்ய கிளிக் செய்யவும்...,



ஒருவரின் ஜாதகத்தில் செவ்வாய், சுக்கிரன் இணைந்திருந்தாலோ, தொடர்பு பெற்றாலோ, கணவன் மனைவி இருவரும் சதா சர்வ காலமும் சண்டை சச்சரவு என இருப்பார்கள், ஆனால் வருடம் தவறாமல் குழந்தை பெற்றுக்கொள்வார்கள். இதுதான் சுக்கிரன், செவ்வாய் எனும் ரகசிய நட்பு.


(ஆனால் இதை அறிந்த ஒழுக்கத்திற்கும் நேர்மைக்கும் அதிபதியான சூரியன், தான் படைத்த செவ்வாயை நட்பு கிரகமாக ஏற்காமல் சமம் என்ற பத்தோடு ஒன்று, இத்தோடு இதுவும் ஒன்று என சற்று விலகியே இருக்கிறார்.)


எனவேதான் சுக்கிரனின் ஆட்சி வீடுகளான ரிஷபம், துலாம் ராசி மற்றும் லக்னக் காரர்களுக்கு செவ்வாய் தோஷம் பாதிப்பை ஏற்படுத்துவதில்லை.


இனி 12 ராசிகளுக்கும் சுருக்கமாக ஒரு வரியில் ஏன் செவ்வாய் தோஷம் பாதிப்பதில்லை எனப் பார்ப்போமா?


லக்னம்/ராசி


மாந்திரீக புத்தகம் பதிவிறக்கம் செய்ய கிளிக் செய்யவும்...,


மேஷம்: விருச்சிகம்:- இது செவ்வாயின் ஆட்சி( சொந்த வீடு). தன் வீட்டுக்கே யாராவது கெடுதல் செய்வார்களா? எனவே தோஷம் இல்லை.


ரிஷபம்- துலாம்: சுக்கிரனின் சொந்த வீடு. இருவருக்கும் ரகசிய நட்பு இருக்கிறது அல்லவா. எனவே செவ்வாய் தோஷம் இல்லை,


கடகம்- சிம்மம் : நவக்கிரகங்களின் தலைவன் சூரியன். எனவே சூரியனோடு சேர்ந்த செவ்வாய் ஒருபோதும் தோஷத்தைத் தருவதில்லை.


மேலும் சந்திரன் தாய் எனும் அந்தஸ்தை உடையதாலும் 12 ராசிகளிலும், ராகு கேது தவிர்த்து மற்ற கிரகங்களை தொடர்பு கொண்டு இருப்பதாலும் தோஷம் இல்லை. மேலும் சந்திரன், செவ்வாய் சேர்க்கை சந்திர மங்கல யோகத்தைத் தருமே தவிர, தோஷத்தை தருவதில்லை.


தனுசு- மீனம்: குருபகவானின் சொந்தவீடு. இவர் தேவகுரு, எனவே குருவோடு சேர்ந்த அல்லது குரு பார்வை பெற்ற செவ்வாய், குரு மங்கல யோகத்தைத்தான் தருவாரே தவிர, தோஷத்தை எப்போதும் தரமாட்டார்,


மகரம்: சனிபகவானின் ஆட்சி வீடு. எனவே இந்த வீட்டில்தான் செவ்வாய் பகவான் உச்சம் அடைகிறார். ஆகவே இங்கு அமர்ந்த செவ்வாய், தோஷத்தை தருவதில்லை,


மாந்திரீக புத்தகம் பதிவிறக்கம் செய்ய கிளிக் செய்யவும்...,


கும்பம்: இதுவும் சனி பகவானின் ஆட்சி வீடு. நாம் ஏற்கெனவே விளக்கியபடி சனிபகவான் தொடர்பு பெற்ற செவ்வாய் பகவான் தோஷத்தைத் தரமாட்டார்.


நான் ஏன் மிதுனம் , கன்னி ராசியை கடைசியாக எடுத்துக்கொண்டேன் என்றால் இந்த இரண்டு லக்ன மற்றும் ராசிகளுக்கு மட்டுமே செவ்வாய் தோஷத்தின் வீரிய அளவு பார்க்கபட வேண்டும்,


இந்த ராசிகளுக்கு செவ்வாய் கடுமையான எதிரி.


எனவே இதற்கு மட்டுமே விதிவிலக்கு என்ன என்பதை ஆராய்ந்தால் போதும், 90 சதவிகிதம் செவ்வாய் தோஷ விலக்கு ஏற்படும்.


எனவே, செவ்வாய் தோஷத்திற்கு இதுவரை தந்த விளக்கங்கள் உங்களுக்குப் பயன் உள்ளதாகவும் இருக்கும்; பயம் போக்குவதாகவும் இருக்கும் என நம்புகிறேன்,


மாந்திரீக புத்தகம் பதிவிறக்கம் செய்ய கிளிக் செய்யவும்...,


எனவே, தோஷத்தைப் பார்த்து பயம் கொள்ளத் தேவையில்லை. ஜாதக ரீதியான பொருத்தங்களை ஆராய்ந்து மணவாழ்க்கை அமைத்துக்கொள்ள வேண்டுகிறேன். மங்கலகரமான வாழ்வு நிச்சயம். மங்காத செல்வமும் பிள்ளைச் செல்வமும் கிடைத்து நல்ல அன்பான வாழ்க்கைத் துணையும் அமைந்து சீரும் சிறப்புமாக வாழ்வீர்கள்!




MAHA GURU BALAJI


CELL : +91 8838511337







கருத்துரையிடுக

0 கருத்துகள்